வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 7- ம் வகுப்பு படித்து வருபவர் கூலித்தொழிலாளியின் 13 வயது மகள். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது சிறுமி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவி தற்கொலைக்கு முயன்ற காரணத்தை கேட்ட பெற்றோர் அதிர்ந்து போயுள்ளனர். மேலும் இது தொடர்பாக திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறைனர் நடத்திய விசாரணையில், சிறுமி படிக்கும் அதே அரசு பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றும் 55 வயதான முரளி கிருஷ்ணா என்பவர் சிறுமியிடம் தொடர்ந்து தகாத முறையில் நடந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 


இதோடு அல்லாமல் தனது வீட்டின் முகவரியை அளித்து தனியாக வரும்படி ஆசிரியர் முரளி கிருஷ்ணா சிறுமியை வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. இதனால் பயந்துபோய் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி செய்வதறியாமல் நேற்று மாலை வீட்டில் இருந்த தின்னரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 


மேலும் படிக்க | பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சரமாரி அடி, உதை



இதனிடையே சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த திருவலம் காவல்துறையினர் ஆசிரியர் முரளி கிருஷ்ணாவை கைது செய்தனர். மேலும், வேறு ஏதேனும் மாணவிகளிடம் இவர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாரா? எனும் கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


தன்னிடம் கல்வி கற்கும் சிறுமியிடம் ஒழுக்கத்தை போதிக்கும் ஆசிரியரே இதுபோன்ற செயலில் ஈடுபட்டது அப்பகுதி பெற்றோர்களிடம் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் கடந்த 17-ம் தேதி இரவு ஆண் நண்பருடன் பயணித்த பெண் மருத்துவர் கடத்தபட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பாலியல் சம்பவம் அரங்கேறியுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | Harassment: பாலியல் தொல்லை தொடர்பாக தலைமை ஆசிரியை & ஆசிரியர் கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR