நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள நகை கடையில் 60 கிலோ தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று கடையின் மேற்கூரையில் துளை போட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கு இருந்த பல வித நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். 


இந்த கொள்ளை சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


கொள்ளை நடந்த நகை கடை அருகே ஒரு கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு பணியில் இருந்த நபர்கள் யாரும் ஈடுபட்டிருக்க கூடுமோ என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. மேலும் இங்கு இருந்த ரகசிய கண்காணிப்பு காமிரா உடைக்கப்பட்டுள்ளது. மகொள்ளை போன தங்கத்தின் மதிப்பு ரூ. 16 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.