கர்நாடகாவில் 2 அணைகளில் இருந்து நீர்திறப்பு 80,000 கனஅடியில் இருந்து 90,000 கனஅடியாக அதிகரித்தது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் கிடுகிடு என நிறைந்து வருகிறது.


இதையடுத்து, கர்நாடகாவில் 2 அணைகளில் இருந்து நீர்திறப்பு 80,000 கனஅடியில் இருந்து 90,000 கனஅடியாக அதிகரித்தது. கபினி அணையின் நீர்மட்டம்- 83.07 அடி, நீர்வரத்து விநாடிக்கு 55,000 கனஅடியாக உள்ளது. 


கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம்-124.80 அடி, நீர்வரத்து விநாடிக்கு 12,710 கனஅடியாக உள்ளது. இதனால் காவரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது!