ஆர்கேநகர் தேர்தல் தேதியை நிர்ணயிக்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி தில் ஹசாரி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் மேலும் ஒரு குற்றம் சாட்டியுள்ளனர். 5 ராசியான எண் என்பதால், ரத்தான தேர்தலை 5-ம் தேதி தேர்தல் நடத்த வேண்டும் என்று சுகேஷிடம் தினகரன் கேட்டுக்கொண்டதாக புகார் அளித்துள்ளனர். 


இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் மேலும் 5 பேரை கைது செய்ய வேண்டியுள்ளது என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். 


தினகரன், சுகேஷ்க்கு இடையேயான தொலைபேசி உரையாடல் குறித்த தகவல்களை நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் ஒப்படைத்துள்ளனர். ஏற்கனவே இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக தினகரன் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.