உசிலம்பட்டி: ATM மையங்களில் பணம் எடுக்க வரும் நபர்களிடம் நூதன முறையில் கொள்ளயடித்த இளம்பெண் கைது.  இந்த காலகட்டத்தில் பலரும் தங்களது அறிவுத்திறனை நல்வழியில் பயன்படுத்தாமல்,தீய வழியிலேயே பயன்படுத்த முயலுகின்றனர்.குறுக்கு வழியில் சம்பாதிப்பதையே குறிக்கோளாக பல கயவர்கள் கொண்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உசிலம்பட்டியில் உள்ள மதுரை சாலை மற்றும் பேரையூர் சாலையில் ATM மையங்கள் செயல்பட்டு வருகிறது.அந்த ATM மையங்களில் பணம் எடுக்க வருபர்களிடம் நான் பணம் எடுத்து தருகிறேன் என்று கூறி இளம்பெண் ஒருவர் பல நாட்களாக பலரிடம் மோசடி செய்து வந்துள்ளார்.  இந்த பெண்ணால் பணத்தை இழந்த பலரில் சிலர் இந்த நூதன மோசடி குறித்து உசிலம்பட்டி காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தனர்.மக்கள் அளித்த புகாரை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணையை தொடங்கினார்.  கொள்ளை சம்பவம் நடந்த ATM மையத்திற்கு சென்ற உசிலம்பட்டி போலீஸ் அங்கு மக்களை கண்காணிக்கும் பொருட்டு பொருத்தி வைத்திருந்த மையங்களில் உள்ள CCTV கேமராவை ஆய்வு செய்தனர். 



போலீசார் மேற்கொண்ட ஆய்வில் இந்த மோசடியில் ஈடுபட்டு அனைவரின் பணத்தையும் சுருட்டியது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்பவரின் மனைவி மணிமேகலை (23) தான் என்று தெரிந்தது.  ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு போலீசார் மணிமேகலையை அவரது வீட்டில் அதிரடியாக கைது செய்தனர்.மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த ரூ. 32 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கத்தை போலீசார் கைப்பற்றினர்.  மேலும் மணிமேகலையை போலீஸ் காவலில் வைத்து தீவிரமாக விசாரித்தனர்.அந்த விசாரணையிலிருந்து இவர் இதுபோன்ற பல மோசடிகளில்,பல இடங்களில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.


ALSO READ புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த நடிகர் மன்சூர் அலிகான் வீட்டிற்கு சீல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR