குளித்தலை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளித்தலை அருகே உள்ள கே.பேட்டை பகுதியில் மணல் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.


காரில் பயணம் செய்த 11 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


2 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரில் பயணம் செய்தவர்கள் கேரள மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் எனவும் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துவிட்டு திரும்பிய போது இந்த கோர விபத்து நடைபெற்றிருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.