நேற்று (பிப்ரவரி 14) ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தில் மோதி தற்கொலை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 42 வீரர்கள் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. இதற்கு அனைத்து கட்சி தலைவர்களும் மற்றும் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைத்தளம் மூலம் நாட்டின் குடிமக்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். உலக நாடுகளும் இந்த கொடூர சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.


இந்தநிலையில், தமிழக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், புல்வாமா தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இரங்கலும், அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளார்.