நடிகர் செந்தில் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சிலர் செந்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பினார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை அறிந்த செந்தில் வதந்திக்கு முற்று புள்ளி வைத்தார். மேலும் அவர் கூறியது. வாட்ஸ்-அப்பில் வரும் செய்தியை யாரும் நம்பவேண்டாம். அது வெறும் வதந்தி. எனக்கு வேண்டாத சிலர் இவ்வாறு பண்ணியிருக்கிறார்கள். ஆண்டவன் புண்ணியத்திலும் மற்றும் "அம்மா" புண்ணியத்திலும் நான் நன்றாக இருக்கிறேன்" என்று தெரிவித்தார். 


அம்மா 234 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும். நான் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறேன். தேமுதிக, த.மா.கா.-மக்கள் நலக் கூட்டணி நிலையானது அல்ல. மேலும் திமுகவை சேர்ந்த ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார் என்றும் தெரிவித்தார்.