சென்னை: அதிமுக அழிந்துவிட்டதாகவும், திமுக அழிந்து கொண்டிருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்:-


நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு திறமையை வளர்த்துக்கொள்ள உதவும், தேசிய அளவிலான போட்டியை எதிர்கொள்ள நீட் தேர்வு உதவும். இதில் தமிழக அரசு வீணாக விளையாடிவிட வேண்டாம். 


தமிழக அரசு, மாணவர்களின் கல்வி திறமையை வளர்க்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தை கொண்டுவந்திருக்காவிட்டால், தமிழகத்திற்கு இப்போது மின்சாரமே கிடைத்திருக்காது. 
அதிமுக ஏற்கனவே அழிந்துவிட்டதாகவே கருதுகிறேன். திமுக அழிந்து கொண்டுள்ளது. இப்போது மக்களிடம் ஒரு தேடுதல் உள்ளது. அந்த தேடுதலை நிறைவேற்றும் தகுதியுள்ள கட்சி பாஜகதான். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்