பழநி அருள்மிகு மாரியம்மன் கோயில்: பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருக்கொடியேற்றம் நடைபெற்றது.  வரும் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி திருக்கல்யாணமும், பிப்ரவரி 28 ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் (Arulmigu Mariamman Temple, Palani) மிகவும் முக்கியமான உவ கோயிலாக விளங்கி வருவது அருள்மிகு மாரியம்மன் கோயிலாகும். உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுபட்டு கிராம மக்களின் மிக பிரதான கோயிலாக அந்த கோயில் உள்ளது.


மேலும் படிக்க | தூத்துக்குடியில் அனுக்கிரஹா தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவாகவும் எதிப்பாகவும் புகார்..!


பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி இரவு முகூர்த்தக்கால் நடுலுடன் துவங்கியது. தொடர்ந்து கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி திருக்கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. மேலும் திருக்கம்பத்துக்கு காணியாளர் அரிவாள் எடுத்துக் கொடுத்ததைத் தொடர்ந்து ராமநாதநகர் அருகே இருந்த ஆலமரத்தில் இருந்து கம்பத்துக்காக திரிசூல வடிவிலான கம்பம் வெட்டி எடுக்கப்பட்டது.இதன் பின்னர் கம்பமானது வையாபுரிக் கண்மாய் அரமசரத்து வினாயகர் படித்துறையில் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கம்பம் சாட்டுவதற்கான உத்திரவு கிடைத்ததைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கம்பம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நான்கு ரதவீதியில் வலம் வர செய்யப்பட்டு மாரியம்மன் கோயில் முன்பு அதிகாலை மூன்று மணிக்கு சாட்டப்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான பெண்கள் கும்மிப்பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரிசூல வடிவிலான கம்பத்துக்கு பால், மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர். மேலும் இந்த கம்பத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால், பன்னீர், மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் இன்று திருக்கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நடைபெற்றத  கொடியேற்றத்தை முன்னிட்டு மாரியம்மன், சிம்மவாகனம், பூஜைப்பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு கொடிபூஜை நடைபெற்றது. பின்னர் சன்னதி முன்பாக உள்ள தங்கக் கொடிக்கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு திருக்கொடி கோயிலை வலம் வர செய்யப்பட்டு  தங்கக்கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.  கொடிக்கம்பத்துக்கு தர்ப்பை, மாலைகள், மாவிலைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு புனித நீருற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.


இதைத் தொடர்ந்து கம்பத்தடிக்கு சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளிய அருள்மிகு மாரியம்மனுக்கும், கொடி மரத்துக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த விழாவை தொடர்ந்து சன்னதிக்கு நேரே அமையப்பெற்ற திரிசூல வடிவிலான திருக்கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சூடச்சட்டி, தீச்சட்டி எடுத்து வந்து நேர்ச்சை செலுத்தினர். வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி மாலை 7 மேல் திருக்கல்யாணமும், பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் மாசித்தேரோட்டம் நடத்தப்பட்டு இரவு 10 மணிக்கு கொடியிறக்கப்பட்டு கம்பம் கங்கையில் சேர்க்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.


மாசி மகம்:
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.


மேலும் படிக்க | திமுக அரசுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற எடப்பாடி பழனிச்சாமி! பின்னணி தகவல்கள்...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ