நடிகர் ரஜினி மனைவி லதாவின் தி ஆஸ்ரம் பள்ளியில் மரத்திலிருந்து விழுந்து ஆறுமுகம் என்ற பணியாளர் மரணம் அடைந்துள்ளார். அவர் பேனர் கட்ட பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை கிண்டி அருகே ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ளது 'தி ஆஸ்ரம்' பள்ளி. ரஜினியின் மனைவி லதா இந்த பள்ளியை நடத்திவருகிறார். தி ஆஸ்ரம் பள்ளியில் ஆறுமுகம் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, தோட்டப்பராமரிப்பு பணி செய்து வந்தார்.


இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி தி ஆஸ்ரம் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மரத்தில் ஏறி மரக்கிளையை வெட்டிக்கொண்டிருந்த போது மரத்திலிருந்து  தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆறுமுகத்துக்கு தலையின் பின்புறத்தில் பலத்த  காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார். தற்போது இதுகுறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.