மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து, கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் கடல் நீர் உள் நுழைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தேன். அளக்குடி-திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவர் பணிகளை உடனடியாக தொடங்கி விரைவாக முடிக்க வேண்டும் என்பது தான் பொதுமக்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொள்ளிடம் ஆற்றில் இருந்து அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் அளக்குடியில் தொடங்கி 22 கிலோ மீட்டர் அளவுக்கு கடல் நீர் உள்நுழைந்திருக்கிறது. சந்தப்படுகை, திட்டுப்படுகை, அனுமந்தபுரம், முதலைமேடு உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது. 


இதனால், குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். மேலும், இப்பகுதிகளில் உள்ள 10,000 ஏக்கர் விளை நிலங்கள் உவர் நிலங்களாக மாறி விட்டன. இதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்வதையே முற்றிலுமாக நிறுத்தி விட்டனர். இத்தகைய சூழலில் இனியும் தாமதிக்காமல் அளக்குடி-திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவரை உடனடியாக அமைத்தால் தான் இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் வீணாவதை தடுக்க முடியும். 



அதேநேரத்தில் இந்த கடைமடை கட்டமைப்புச் சுவரை விரைந்து கட்டி முடிக்கும்பட்சத்தில், அங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்த முடியும்; உப்புத்தன்மை கொண்டதாக மாறிய நிலங்களை மீண்டும் விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களாக மீட்டெடுக்க முடியும். அதுமட்டுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் சிக்கலையும் தீர்க்க முடியும். நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் அந்த பகுதிகளில் விவசாய மறு மலர்ச்சியும் ஏற்படும். வங்கக்கடலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அளக்குடி பகுதியில் கடைமடை கட்ட மைப்பு கட்டுவதற்கு ரூ.540 கோடியில் திட்டம் தயாரிக்கப் பட்டிருக்கிறது. 


மேலும் படிக்க | எடப்பாடி அஸ்திவாரத்தில் கை வைக்கும் ஓபிஎஸின் நெக்ஸ்ட் மூவ்!


இந்த கடைமடை கட்டமைப்புச் சுவர் கட்டி முடிக்கப் பட்டால், அதில் 0.366 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்தத் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளுக்காக ரூ.94.52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மண் பரிசோதனை மற்றும் பிற ஆய்வுப் பணிகளும் நிறைவடைந்து விட்டன. இந்தத் திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நீர்வளத் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறேன். இந்த பணிகள் முடிவடைந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், ஒப்பந்தப் புள்ளிகளைப் பெற்று கடைமடை கட்டமைப்புச் சுவரை கட்டும் பணிகளை தொடங்க முடியும். அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம் மாதிரி வேளூர்-கடலூர் மாவட்டம்-நல்லாம்புத்தூர் இடையே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்கள் பயனடையும். 


இந்தத் திட்டத்தையும் ரூ.399 கோடி செலவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு, திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் திருச்சி மண்டலத்தில் நடைபெற்று வருவதாக அறிகிறேன். அளக்குடி-திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவர், மாதிரிவேளூர் -நல்லாம்புத்தூர் தடுப்பணை ஆகிய இரு திட்டங்களையும் செயல்படுத்தினால் இரு நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் மறுமலர்ச்சி பெறும். இந்த நன்மைகளைக் கருத்தில் கொண்டு இந்த இரு திட்டங்களுக்கும் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு தாங்கள் ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR