தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி கிருஷ்ணா நீரை வழங்க ஆந்திரா ஒப்புதல்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2.5 டி.எம்.சி அளவு கிருஷ்ணா நதி நீரை வழங்க ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் 2.5 டி.எம்.சி அளவு கிருஷ்ணா நதி நீரை தமிழகத்திற்கு அளிப்பதாக ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


உடனடியாக 2.5 டி.எம்.சி அளவு நீரை சென்னை மாநகர குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய திறந்துவிட இருப்பதாகவும் ஆந்திர அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.