Annamalai: கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "அமைச்சரை நீக்க உரிமை இருக்கா என்பதில் பாஜக உள்ளே செல்ல விரும்பவில்லை. ஆனால்  மு.க. ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கடந்த காலங்களில் வலியுறுத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் எதிர்கட்சி வரிசையில் இருந்த ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு எப்படி எதிர்க்கிறார். ஏன் தெரியவில்லை, முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்படி ஆளுனர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். செந்தில் பாலாஜி ஊழல்வாதி என்பது முதல்வருக்கு தெரியும். ஆனால் முதல்வர் வரம்பு மீறி செயல்படுகிறார்.


முதல்வரின் கவனம் ஐந்தாண்டுகளில் எப்படி மாறியுள்ளது. ஏன் என்று தெரியவில்லை. ஆளுநர் சார்பாக நாங்கள் பேச முடியாது. ராஜ்பவன் வேறு. பாஜக வேறு. ஆனால் கடிதத்தை படிக்கும் போது என்னுடைய கருத்தை பதிவு செய்கிறேன். தமிழ்நாடு அமைச்சரவையில் 99% அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. பலருக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.


மேலும் படிக்க | சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள கல்லறை! நீதிபதி அதிரடி உத்தரவு!


ஆளுநர் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில் பாலாஜி மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு இல்லை. அவர் செய்த குற்றித்தின் மீது தான் வெறுப்பு. இது தனிமனித தாக்குதல் கிடையாது.
முதல்வர் நடந்து கொள்வது தர்மத்திற்கு விரோதமானது. ஒரு மனிதனுக்காக அரசங்கத்தை களத்தில் இறக்கிவிட்டுள்ளனர். 


கல் குவாரிகள் தமிழ்நாடு முழுவதும் ஸ்ட்ரைக் செய்துள்ளனர். கரூரில் கட்சிவாரியாக குவாரிகள் இயங்கி வருகிறது. ஆனால் ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி மற்ற கட்சிகளை பழி வாங்குகிறது. இதை அரசு சரி செய்ய வேண்டும். மேலும் செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாகியுள்ளார். அமலாக்கத்துறை விசாரிக்க விடமால் அரசு உதவுகிறது. 


சிதம்பரம் கோவில் பற்றி பொதுப்பார்வை இல்லாமல் இருக்கிறது. பொட்டு தீக்சர் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் கோவில் உள்ள நிலையில், மாநில அரசு கோவிலை கட்டுபடுத்த நினைக்கிறது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மீறி அரசங்கம் செயல்படுகிறது. மாநில அரசு அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள். மீறி கொடுத்தால் கோவில் முன்பு நானே பேராட தயங்கமாட்டேன்.  


வருகின்ற ஜீலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்க உள்ளேன். அமித்சா தொடங்கி வைக்கி உள்ளார். கட்சி நிகழ்வாக ஆப்ரிக்கா செல்ல இருப்பதாலும், உள்துறை அமைச்சரின் நேரம் கிடைக்க வேண்டி உள்ளதால் நடைபயணம் தாமதமாகிறது. மாமன்னன் படம் இன்னும் பார்க்கவில்லை, யார் மனதையும் புண்படுத்தமால் இருக்குமாறு எடுக்க வேண்டும்" என்றார்.


நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு,'நிஜத்தில் நான் நடிக்க தெரியாதவன்' என்றார். விஜய் அரசியல் வருவதாக கேட்ட கேள்விக்கு, 'யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் வந்தால் வரட்டும்" என பதிலளித்தார். 


மேலும் விஜய் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிக்கு கண்டனம் எழுந்தது குறித்த கேள்விக்கு, "படத்தில் புகைபிடிப்பதால் இளைஞர்கள், குழந்தைகள் அதை பின்பற்றி கெட்டு போவாங்க என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். சாலையில் கூடதான் புகைப்பிடிக்க செய்கிறார்கள். அதை பார்த்து கெட்டு போகமாட்டார்களா??  ஆனால் மத்திய அரசின் விதி முறைகளை பின்பற்றி மறைக்க வேண்டியதை மறைத்து, வாசகங்களை போட்டு படத்தை வெளியிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.


மேலும் படிக்க | அரசியல் காழ்புணர்ச்சி... எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என எங்களுக்கு தெரியும் - தங்கம் தென்னரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ