ஆவின் பால் விலை விரைவில் உயருகிறது என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக பால் தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆவின் பால் நிறுவனம் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள அலுவலகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். 


நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-


பேசியதாவது:உலக பால் தினத்தை முன்னிட்டு, ஒரு நாள் மட்டும், ஆவின் பாலகங்களில், ஆவின் பால் பொருட்களுக்கு, 5 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு, தரமான பால் வழங்குவதையே, ஆவின் கொள்கையாக கொண்டு உள்ளது.


ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த உள்ளோம். பால் விலையை ஏற்றுவது தொடர்பாக, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


இவ்வாறு, ராஜேந்திர பாலாஜி கூறினார்.