தமிழ்நாடு முழுவதும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எழும்பூரில் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-


சென்னை மாநகராட்சி பகுதியில் பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் இணைய தளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதேபோன்று இனி தமிழ்நாடு முழுவதும் ஒரே இணைய தளம் மூலம் பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்யும் மென் பொருளை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்திருக்கிறேன்.


இதன்மூலம் மாநிலத்தில் எந்த பகுதியில் வசிக்கு மக்களும் பிறப்பு-இறப்பு சான்றிதழை எந்த ஒரு இ-சேவை மையத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன்மூலம் எந்த சிரமமும் இன்றி பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை பெறலாம்.


இவ்வாறு அவர் கூறினார்.