கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் பங்களாபுதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் சித்ரா. அதே பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் மணிகண்டன். இவரது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளியில் மாணவர்களுக்கு உணவளித்ததோடு, பள்ளி வகுப்பறையில் கேக்வெட்டி கொண்டாடியதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்நிலையில், அப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரியும் சித்ரா, மணிகண்டனுக்கு கேக் வெட்டி ஊட்டிய போட்டோ ஃபேஸ்புக்கில் வைரலானது. இந்த சம்பவம் பேசும் பொருளாக மாறியது. இதனை அடுத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் பேரில் குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.



மேலும் படிக்க | காலையில் பெண் பார்த்து மாலையில் திருமணம் - முதலிரவில் ட்விஸ்ட் வைத்த மணப்பெண் !


அதில், தலைமை ஆசிரியை சித்ரா மற்றும் பள்ளி ஆசிரியர் மணிகண்டன் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், தலைமை ஆசிரியை சித்ரா நல்லாசிரியர் விருது பெற்றவர். இன்னும் ஓராண்டில் ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | திருமணமான 5 நாட்களில்... கறிவிருந்து வைத்து மருமகனை வெட்டி கொன்ற மாமனார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR