வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் (Tamil Nadu) மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டலத்தில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று பல பகுதியில் மழைக்கு வாய்ப்பு (Heavy Rain) இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.


இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... "குமரிக்கடல் மற்றும் இலங்கைக் கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதனால் இன்றும் நாளையும் தென்தமிழகம், வடகடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


ALSO READ | தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!


மேலும், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட 8 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இயல்பை விட 41 சதவிகிதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR