மெட்ரோ ரயிலில் இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் சென்ட்ரல் முதல் ஏர்போர்ட் வரை இயக்கப்படும் மெட்ரோ சேவை பாதிப்புக்குள்ளானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து அந்நிறுவன ஊழியர்கள் கோயம்பேடு அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரும் மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலக நுழைவு வாயிலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில் சில இடங்களில் சிக்னல் கோளாறு காரணமாக சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏர்போர்ட் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.