சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக  மாடல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது சயித். 27 வயதாகும் இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார் . மாடலிங் மற்றும் ஈவண்ட் மேனேஜ்மண்ட் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3 வருடங்களாக ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி காதலித்து அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதே நேரத்தில் முகமது சயித் தனது இன்ஸ்டாகிராமில் தான் பதிவிடும் மாடல் புகைப்படங்களைப் பார்த்து தன்னிடம் பேசும் பெண்களிடமும் ஆசை வார்த்தைகள் கூறி காதல் வலை வீசியுள்ளார். அவர்களை இரவு நேரம் விடுதிகளுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் லட்சக்கணக்கில் பணத்தையும் தன்னுடன் பழகும் பெண்களிடம் இருந்து வாங்கி சொகுசு வாழ்க்கைக்காக செலவும் செய்துள்ளார். பின்னர் பிசினஸில் கொஞ்சம் பணம்  சிக்கிக் கொண்டதைத் தொடர்ந்து பல பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.



இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் தனது ஓட்டேரி பகுதி காதலியுடன் ஈ.சி.ஆர் பகுதிக்கு முகமது சயித் சென்றபோது எதேச்சையாக அவரது செல்போனை வாங்கிப் பார்த்துள்ளார் காதலி. அதில்  முகமது சயித் பல பெண்களுக்கு காதல் வலைவீசி குறுஞ்செய்தி அனுப்பியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதுபற்றி காதலனிடம் எதுவும் கேட்காமல் சம்மந்தப்பட்ட 2 பெண்களின் இன்ஸ்டாகிராம் ஐ.டி-க்களை மட்டும் குறித்து வைத்து, அவர்களிடம் தனித்தனியாக பேசியபோது தனது காதலனான முகமது சயிதின் பல பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி வந்தது தெரியவந்தது.   


மேலும் படிக்க | விருது நகரில் ஒரு 'பொள்ளாச்சி' சம்பவம்; வீடியோ... மிரட்டல்... வன்புணர்வு....!!!


அதனைத் தொடர்ந்து 3 இளம் பெண்களும் முகமது சயித் தங்கள் 3 பேரையும் காதலிப்பதாக ஏமாற்றி ஒரே நேரத்தில் தங்கள் அனைவரையும் பாலியல் தேவைக்கும் பயன்படுத்தியதாக வேப்பேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதோடு தங்களிடம் இருந்து அவர் லட்சக்கணக்கில் பணம் பறித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். புகாரின் அடிப்படையில்  முகமது சயித்தை வேப்பேரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


விசாரணையில் தான் யாரையும் கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்யவில்லை எனவும், விரும்பித்தான் அனைவரும் தன்னுடன் பழகியதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 புகார்கள் மட்டுமே போலீசாரால் பெறப்பட்டுள்ள நிலையில், கடந்த ஓராண்டில் இன்ஸ்டாகிராம் மூலம் இதேபோல 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் முகமது சயித் பழகியது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சயித் நீதிமன்ற உத்தரவுப்படி சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


மேலும் படிக்க | கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கு..தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு


 மேலும், 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது சயித்-ஐ காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டையும் போலீசார் சோதனையிடவுள்ளனர். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் ஆன்லைன் மூலமாகவோ நேரடியாக புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். புகார் அளிப்பவரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR