சென்னை: சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை  பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னைக்கு அருகே வர்தா புயல் இன்று பிற்பகலில் கரையை கடக்கிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை கொட்டி வருகிறது.


காஞ்சிபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்துவருகிறது.  இன்று காலை திருவள்ளூர், பொன்னேரி, எண்ணுார், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.