சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் பிரதீப். 41 வயதாகும் அவர் மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டியேலே இருந்துள்ளார். அவருக்கு 41 வயதான மனைவி பிரீத்தா மற்றும் 20 வயதில் மகள் மற்றும் ஒரு மகனும் இருக்கின்றனர். தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபடும் அவர், வியாழக்கிழமையும் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | கொலையில் முடிந்த வாய்த்தகராறு! கணவரே மனைவியை கொன்ற விபரீதம்!


போதைக்கு தலைக்கு ஏறிய நிலையில் இருந்த அவர், வீட்டில் இருந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது, மகள் கதறியதைக் கேட்டு ஓடிவந்த தாய் பிரீத்தா, கணவனிடம் இருந்து மகளை மீட்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணவனை சமாளிக்க முடியாத மனைவி பிரீத்தா கையில் கிடைத்த சுத்தியை எடுத்து, பிரதீப் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து கீழே விழுந்து இறந்துள்ளார்.


ALSO READ | "உல்லாச விருந்து" மயங்கிய அரசியல் தலைவர்கள் வீடியோ எடுத்து மிரட்டிய இளம்பெண்!


இதனையடுத்து அருகில் இருந்த காவல்நிலையத்துக்கு பிரீத்தா தகவல் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர், பிரதீப்பின் உடலைக் கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கணவனை கொலை செய்த மனைவி பிரீத்தாவை கைது செய்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR