Chennai Train Sexual Harassment: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இளம் பெண் ஒருவர் பாலியல்  வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்ற ரயிலில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளிக்காமல் நேரடியாக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கு விஷயத்தை கேள்விபட்ட மருத்துவர்கள் இது குறித்து ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் இளம் பெண்ணிடம் நேரடியாக விசாரணை செய்த ரயில்வே காவல்துறை, இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அவரை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எங்கே? எப்போது? தெரியுமா?


பாலியல் வன்கொடுமை நடைபெற்றது எப்போது? 


ஆகஸ்ட் 25 ஆம் தேதி திருச்சி இருந்து சென்னை சென்று கொண்டிருந்த ரயிலில் அந்த இளம் பெண் சென்றுள்ளார். ரயில் காட்பாடியை அடைந்தபோது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் காவல்துறையில் புகார் ஏதும் அளிக்கவில்லை. ரயில் சென்னையை அடைந்ததும் எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் தனக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த எழும்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


சந்தேகப்படும் நபரின் புகைப்படம் வெளியீடு



மருத்துவர்களின் தகவலின் அடிப்படையில் எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் ரகசிய விசாரணை நடத்தினர். இதனடிப்படையில் ரயில்வே காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து அந்த ரயிலில் பயணித்தவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்த காவல்துறை, சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை இப்போது வெளியிட்டுள்ளது. அந்த நபர் குறித்த தகவலை தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த நபரின் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களிலும் காவல்துறை வெளியிட்டுள்ளது.  


கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தீயாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் ரயிலில் இளம் பெண்ணுக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கும்  வகையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 


மேலும் படிக்க | ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் - ரூ. 89.19 கோடி சொத்துகளும் அமலாக்கத்துறை முடக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ