பாசனத்திற்காக பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, வரும் 23 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது...


"திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, பொருந்தலாறு அணையிலிருந்து பழைய ஆறு அணைக்கட்டு கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு முறைப்பாசனம் மூலம் வரும் 23 ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். 


இதனால், பழனி வட்டத்திலுள்ள 4,162 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" எனவும்  அறிவித்துள்ளார்.