வைகை பூர்வீக பாசனப் பகுதி வேளாண் பெருமக்களின் கோரிக்கையின் படி வைகை அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...


"வைகை அணையிலிருந்து வைகை பூர்வீக பாசனப் பகுதி 1-ன் ஆயக்கட்டு பகுதிக்கு குடிநீர் தேவைக்காக வைகை ஆற்றுப் படுகையினை நனைக்கும் வகையில் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வயதுள்ளன. 


வேளாண் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று வைகை அணையிலிருந்து வைகை பூர்வீக பாசனப் பகுதி 1-ன் ஆயக்கட்டுப் பகுதிக்கு குடிநீர் தேவைக்காக வைகை ஆற்றுப் படுகையினை நனைக்கும் வகையில் 349.06 மில்லியன் கன அடி தண்ணீரினை 20.12.2017 முதல் திறயது விட நான் ஆணையிட்டுள்ளேன். 


மேலும், விவசாயப் பெருமக்கள் மற்றும் வைகை ஆற்றுப் பகுதி 1-ஐ சார்யத கிராம மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என தெரித்துள்ளார்.