திண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு, வேளாண் பெருங்குடி மக்களிடன் இருந்து வேண்டுகோள் வந்துள்ளதை அடுத்து, வேளாண் பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று திண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது., நங்காஞ்சியாற்று படுகையில் விருப்பாட்சி கிராமம் முதல் ஜவ்வாதுப்பட்டி கிராமம் வரையுள்ள குடிநீர்க் கிணறுகள், தடுப்பணைகள், அணைக்கட்டுகள் ஆகியவற்றை செறிவூட்டும் பொருட்டு, பரப்பலாறு நீர்தேக்கத்தில் கீழ் பாசனம் பெறும் குளங்களில் 1323 ஏக்கர் நிலங்கள் மற்றும் அதில் உள்ள கிணறுகள் பயன்பெரும் வகையிலும், பரப்பலாறு நீர்தேக்கதிலிருந்து 25.2019 முதல் 6.2.2019 வரை மொத்தம் 75.51 மி.க.அடி தண்ணீர்திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


இதனால் திண்டுக்கல் மாவட்டல் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள 1323 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.