புயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலனை செய்வதாக துணை முதல்வர் தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 


புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் 12 மாவட்டங்களில் 'கஜா' புயல் தாக்கம் அதிகம் இருந்தபோதிலும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களி கஜா பாதிப்பு மிகஅதிகமாக இருந்தது. இதன் காரணமாக கடந்த 20-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஹெலிகாப்டரில் ஆய்வு மேற்கொண்டதற்கு பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, சமீபத்தில் இரயிலில் சென்று புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டார். 


இதை தொடர்ந்து, கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது பற்றி, தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்யும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். 


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட இயற்கை பேரிடரை வைத்து அரசியல் செய்ய கூடாது என்றார்.


அரசின் முன்னெச்செரிக்கை நடவடிக்கை காரணமாக, உயிர் இழப்புகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்யும் என்றும் துணை முதலமைச்சர் கூறினார். மேலும், கர்நாடகா புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது எனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.