வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்து குளுமையாக்கியுள்ளது. கோடை காலம் முடிந்த நிலையில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. அதேபோல புதுச்சேரியிலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 24மணி நேரத்தில் வடபழனி, போரூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. அதேபோல், பூந்தமல்லி,மதுரவாயல், பல்லாவரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது.


தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்வதால், பலத்த கற்று வீசுவதாலும் பொது மக்கள் வெளியில் செல்லும் போது பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.