பூண்டி அரசு மேல் நிலைப் பள்ளி மாணவ  மாணவிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பள்ளியை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பாதிப்புக்கு உள்ளான வகுப்பறையை மட்டும் மூடிவிட்டு மாற்று இடத்தில் வகுப்புகள் நடைபெறும் என பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ ஓடும் ரயிலில் மாணவி விபரீத சாகசம்: அறிவுரை வழங்கிய எஸ்.பி


தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 2-வது அலை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு பள்ளி கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டது. அரசின் விதிமுறைகளான முக கவசம் அணிதல், சமூக பாதுகாப்பை கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க உத்தரவிட்டது.  அதனடிப்படையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதனை பின்பற்றி வகுப்புகளை நடத்தி வந்தனர்.  


இந்நிலையில்  திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பரிசோதனை செய்த பூண்டி  அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு  பயிலும் 3 மாணவிகள் 2 மாணவர்கள் என 5 பேருக்கு கொரோனா  தொற்று  இருப்பது உறுதியாநது.  இதனால் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் பள்ளியை தூய்மை படுத்தும் பனியில் பள்ளி நிர்வாகம். ஈடுபட்டுள்ளனர். தற்போது விடுமுறை என்பதால் தூய்மைப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.  


வருகிற திங்கட் கிழமை முதல் குறிப்பிட்ட ஒரே வகுப்பைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால் மாற்று வகுப்பறையில் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார். 


ALSO READ POCSO Arrest: பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் போக்சோவில் ஆசிரியர் கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR