நாகை அருகில் அந்தனபேட்டை சுனாமி குடியிருப்பில் வசிக்கும் பழனிவேலு   என்பவரும் அவரது  மனைவி ராஜலட்சுமியும் நாகை துறைமுகத்தில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வரும் நிலையில், இன்று காலை வீட்டு வேலையாக வீட்டிற்க்ன் பின் புற பகுதிக்கு சென்ற  பழனிவேலுவின் மனைவி எதிர்பாராதவிதமாக அவரின் வீட்டு வழியாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி அறுந்து ராஜலட்சுமியின் மேல் விழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சத்தம் கேட்டு வீட்டிலிருந்து ஓடி வந்த பழனிவேலு தனது மனைவியை காப்பாற்றும் முயற்சியில் மின் கம்பியை கையால் தட்டியுள்ளார். அதனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததால், சம்பவ இடத்திலேயே கணவனும், மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தனர். 


ALSO READ | TN School Reopening: நவம்பர் 1ம் தேதி நர்சரி, அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது


இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த கணவன் மனைவி இருவரின் உடலையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மின் விபத்து தொடர்பாக நாகை நகர காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


நாகை அருகே உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து கணவனும், மனைவியும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அந்தனபேட்டை கிராம மக்கள் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ALSO READ |  பதுங்கிப் பாய்கிறதா கொரோனா? ஒரே பள்ளியைச் சேர்ந்த 22 குழந்தைகளுக்கு தொற்று உறுதி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR