சென்னை: கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீன் வாங்க சென்னையில் (Chennai) உள்ள காசிமெடு மீன்பிடி துறைமுகத்திற்குள் (Kasimedu fishing harbour) பொது மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தமிழக அரசு நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மீன் விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒரு நிலையான நேர ஸ்லாட் போன்ற பல விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன, மீன் வாங்குவதற்காக துறைமுகத்திற்கு வருபவர்கள், பெரும்பாலும் சமூக தொலைதூர (Social distancing) விதிமுறைகளை மீறுகின்றன என தொடர்ந்து குற்றசாற்று எழுந்துள்ளது.


உயர் அதிகாரிகள், படகுகள் சங்கம் மற்றும் வர்த்தகர்களின் உயர் மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, துறைமுகத்திலிருந்து ஒரு நாளைக்கு 50 முதல் 70 படகுகள் மட்டுமே மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் (Fisheries Minister D Jayakumar) தெரிவித்தார்.


ALSO READ | மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண சட்டங்கள் தளர்த்த வேண்டும்!


"மீன் வாங்க எந்தவொரு சூழ்நிலையிலும் பொது மக்கள் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார். மேலும் கடற்கரை ஊரத்தில் தங்கள் பிடித்த மீன்களை விற்க 50 படகுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் மற்றும் மீனவர்கள் (Fishermen) விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்வது அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை ஐந்து மணி நேரத்திற்கு மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.


150 பேர் கொண்ட குழுக்கள் மட்டுமே வர்த்தகர்கள் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இவர்களின் கொள்முதல் முடிந்ததும் அடுத்தடுத்து ஒவ்வொரு குழுவும் அனுமதிக்கப்படும். மீன் பிடிக்க இயக்கப்படும் படகுகள் (Boats) கேடமரன்களில் பணிபுரியும் மீனவர்களுக்கு அருகே தங்கள் மீன்களை விற்பனைக்கு வைக்கக்கூடாது எனவும் அமைச்சர் கூறினார். இந்த விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.


ALSO READ | சென்னை மீன்களில் வேதிப்பொருள் கலப்பு இல்லை -ஜெயக்குமார்!