மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண சட்டங்கள் தளர்த்த வேண்டும்!

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைப் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவிடம், கனிமொழி  கோரிக்கை விடுத்துள்ளார்.

Last Updated : Sep 14, 2019, 07:35 AM IST
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண சட்டங்கள் தளர்த்த வேண்டும்! title=

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைப் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவிடம், கனிமொழி  கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையிலான குழு, இலங்கைப் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவை நேற்று சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது கனிமொழி எம்பி, 'தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு மீனவர் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்.' என கோரிக்கை விடுத்தார்.

இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. எனவே, அவர்களை விடுவிக்கும்போது படகுகளையும் சேர்த்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படகுகள் விடுவிக்கப்படாததால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே, இது தொடர்பான சட்டத்தைத் தளர்த்தி, படகுகளையும் விடுவிக்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

அதேவேளையில் இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். முன்னதாக கனிமொழி எம்பி, இது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதாராச்சியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News