விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன், தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பாண்டியன் நகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஹரிஹரனிடம் நெருங்கிப் பழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைத் தொடர்ந்து ஹரிஹரன் நண்பர்களான ரைஸ்மில் உரிமையாளர் மகன் ஜூனத் அகமது, டிரைவர் பிரவீன் மற்றும் 9ம் வகுப்பு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேரும் ஹரிஹரன் காதலித்த இளம்பெண்ணிடம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் எனக் கூறி மிரட்டியுள்ளனர். 


இதனால், பயந்து போன இளம்பெண்ணை இதையே கூறி பல முறை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர் ஹரிஹரனின் கொடூர நண்பர்கள். தொடர்ந்து இவர்களால் பாதிக்கப்பட்ட இளம்பெண் இந்த கொடூரர்களிடமிறிந்து மீள்வதற்காக, தனக்கு தெரிந்த மாடசாமி என்பவரிடம் கூறியபோது தான் அவர்களை பார்த்துக்கொள்வதாக கூறி சம்பந்தப்பட்ட அந்த வீடியோவை அவர் தனது செல்போனுக்கு பார்வர்டு செய்து கொண்டுள்ளார். 


மேலும் படிக்க | ஜெ. மரண மர்மம் விலகுமா? - விசாரணை ஆணையத்தில் நாளை ஓ.பி.எஸ் ஆஜர்!


சில நாட்களுக்கு பின் வேலியே பயிரை மேய்ந்த கதையாக மாடசாமியும் அந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதன் காரணமாக கொடூரர்களால் தொடர்ந்து தொல்லைக்கு உள்ளான இளம்பெண் இதுகுறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 



போலீஸார் வழக்குப் பதிந்து திமுக மானவரணியை சேர்ந்த ஹரிஹரன், ஜூனத்அகமது மற்றும் மாடசாமி, பிரவீன், பள்ளி மாணவர்கள் 4 பேர் ஆகியோரை நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் பாண்டியன் நகர் காவல்துறையினர். எங்கோ பொள்ளாச்சியில் நடந்ததை போன்ற சம்பவம் விருதுநகரிலும் அரங்கேறியிருப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹரிஹரனிடம் நடந்துகொண்டதைப் போல, தங்களிடமும் நடந்துகொள்ள வேண்டுமென்று அவளிடம் வற்புறுத்தி, சம்மதிக்காவிட்டால் வாட்ஸ்-ஆப் மற்றும் பேஸ்-புக்கில் பரப்பிவிடுவோம் என்று மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த நிலையில், 7 பேர் தன்னைத் தொடர்ந்து பலவந்தப்படுத்தி வருவதை, டிரைவர் வேலை பார்க்கும் மாடசாமியிடம் எடுத்துச்சொல்லி, காப்பாற்றும்படி கெஞ்சுகிறாள்.


மேலும் படிக்க | ஈ.சி.ஆரில் நடந்த மதுவிருந்து... ஆட்டம் பாட்டம் ; போலீஸ் வந்ததும் அப்படியே ஓட்டம்..!


மாடசாமியோ, அந்த பலான வீடியோவை தனது செல்போனுக்கு ஃபார்வேர்ட் செய்துகொண்டு, ‘அந்த 7 பேரிடம் பழகியதைப் போல என்னிடமும் பழகவேண்டும். மறுத்தால், இந்த வீடியோவை உன் அம்மாவிடம் காட்டுவேன்’ என்று மிரட்டி, கடந்த 20-ஆம் தேதி அவளுடைய வீட்டில் வைத்தே பாலியல் அத்துமீறலை நடத்தியிருக்கிறான்.  


உதவ வேண்டிய மாடசாமியும் மிரட்டி, அதே தவறைச் செய்ததால் விரக்தியுற்ற அவள், கடந்த 6 மாத காலமாக வீடியோவைக் காட்டி மிரட்டி, 7 பேர் தன்னைத் தொடர்ந்து சிதைத்து வந்ததையும், மாடசாமியின் அத்துமீறலையும் குமுறலுடன் புகாராக எழுதி, விருதுநகர் பாண்டியன் நகர் காவல்நிலையத்தில் கொடுத்துள்ளார்.


கைது செய்யப்பட்ட 8 பேரையும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற ஆஜர்படுத்த நீதிபதி(பொறுப்பு) கோபிநாத் உத்தரவிட்டார். 


நீதிபதி இதில் நான்கு பேரை ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டன. நான்கு பள்ளி மாணவர்கள் மதுரையில் உள்ள அரசின் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR