காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், இளம் பெண்ணின் உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து கிடைத்த மணிபர்சை ஆய்வு செய்த போலீஸார் அதில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையில் மர்மமான முறையில் இறந்துகிடந்த அந்த பெண், காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த 23 வயதான பிரியா என்பது தெரிய வந்துள்ளது.


இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அது மட்டுமின்றி இவருக்கு காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதான வேங்கடேசன் என்பவருடனும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வெங்கடேசனை பிடித்து விசாரணை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.


மேலும் படிக்க | தீரன் பட பாணியில் வேட்டையாடிய கும்பல் - கதிகலங்கிய கண்டமங்கலம்..!


ஆனால் வெங்கடேசன் தீடிரென தலைமறைவான நிலையில் இந்த பெண்ணின் உயிரிழப்பிற்கும், வெங்கடேசனுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து வெங்கடேசனுக்கு வலை விரித்த போலீஸாரின் பிடியில், வெங்கடேசன் மட்டுமின்றி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணும் சிக்கியுள்ளார்.


இவர்களிடம் போலீஸார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.  உயிரிழந்த பிரியா கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும், இவரை ஜோதி என்ற பெண் பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த பாலியல் தொழில் அப்பகுதியை சேர்ந்த பல இளம் பெண்களை ஜோதி பயன்படுத்தி வந்துள்ளார்.


இந்நிலையில் வெங்கடேசன் மற்றும் ஜோதி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பிரியாவின் சாவுக்கு காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா புகைத்தபோது போதை தலைக்கேரி பிரியா உயிரிழந்தாரா அல்லது வேறு யாரேனும் அவரை கொலை செய்து விட்டு வீடி எரிந்தார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


23 வயதான இளம் பெண் கஞ்சாவிற்கு அடிமையாகி, கணவனை பிரிந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | Crime: குவாட்டருக்காக ஒரு கத்திக்குத்து; குடிமகனின் வெறிச்செயல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR