பிசாசுகள் குடியேற பேய்கள் வெளியேறுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏராளமான அதிர்ச்சி நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. நேற்று சசிகலா அவர்கள் முதல்வர் பதவியும் தான் ஏற்கா இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இச்சம்பம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


சென்னையில் அதிமுக மூத்த தலைவர் பிஹெச் பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது அதிர்ச்சிக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். தமிழக முதல்வரின் சிறப்பு அதிகாரி பதவியில் இருந்து சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா செய்துள்ளார். இதுபோல் முதல்வர் அலுவலக அதிகாரிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் திடீரென பதவி விலகி வருவதும் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறப்படுள்ளதாவது:- பிசாசுகள் குடியேற பேய்கள் வெளியேறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.


 



 


மன்னார்குடி கும்பலை பிசாசுகள் என கூறி ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.