தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கையிலெடுத்திருக்கும் ஆயுதம் லாக்கப் மரண விவகாரம். ஓராண்டு திமுக ஆட்சியில் அடுத்தடுத்து நிகழ்ந்த லாக்கப் மரணங்களால் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, காவல்துறை மீதான நம்பிக்கையை பொதுமக்கள் மெல்ல இழக்கும் நிலைக்கு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில், நிகழும் லாக்கப் மரணங்களுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, போலீஸார் தரப்பில் சில விளக்கங்களைக் கொடுத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ‘படுக்கை அறையின் சுகத்தில் இருந்து வெளியே வாங்க’ - ஃபிட்னஸுக்கு அழைக்கும் டிஜிபி சைலேந்திரபாபு.!


காவல்நிலையங்களில் ஏற்படும் மரணங்களை முற்றிலும் தடுத்துநிறுத்தும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. தமிழக காவல்துறையும், குரலற்றவர்களின் குரல் என்ற அமைப்பின் சார்பிலும்  மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராஜர் கலைக்கல்லூரியில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், காவல் கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் காவல் ஆணையர் செந்தில்குமார் மற்றும் தென்மண்டலத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் சைலேந்திர பாபு பேசியதாவது, 


‘காவல்துறை தொடங்கப்பட்டதில் இருந்தே காவல்துறை துன்புறுத்தல் புகார்கள் உள்ளது. 1902 ம் ஆண்டில் இருந்தே காவல்துறையினர் துன்புறுத்தியதாக புகார் வந்தது. 


கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2018ம் ஆண்டு 18 காவல்நிலைய மரணங்கள். இதுவே அதிகபட்சம். 2021ல் 4 பேர். ஆனால், 2022ம் ஆண்டில் 2 காவல் நிலைய மரணங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன.


காவல் மரணங்கள் நிகழக்கூடாது என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் காவல்துறையினர் செயல்பட வேண்டும். தவறு செய்யாமலேயே சில நேரங்களில் காவல்துறையினர் மீது புகார் வருகின்றன. 80 காவல்நிலைய மரணங்களில் 12 வழக்குகளில் மட்டுமே காவல்துறையினர் மீது தவறு இருந்ததாக சி.பி.சி.ஐடி விசாரணையில் தெரிகிறது. 


மேலும் படிக்க | கந்துவட்டிகாரர்களுக்கு ஆப்பு அடிக்கும் "ஆப்ரேஷன் கந்துவட்டி" - டிஜிபி சைலேந்திரபாபுவின் உத்தரவால் பரபரப்பு


இதில் 12 நிகழ்வுகளில் மட்டுமே காவல்துறையினர் சம்மந்தப்பட்டு உள்ளனர். இதில் 48 காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


சிலர் உடல்நலக் குறைவுகள், தற்கொலை செய்து கொள்வர். ஆனால் அதற்கும் காவல்துறை மீது குற்றம் சாட்டப்படுகிறது. காவல்நிலையத்தில் குற்றவாளிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். காவலர்கள் உளவியலும், அறிவியலும் தெரிந்து கொள்ள வேண்டும். சிலர் தற்கொலை எண்ணத்தில் இருப்பதால் காவல்துறையினர் விழிப்புடன் இருக்க வேண்டும். 


தமிழ்நாடு காவல்துறை பாரம்பரிய மிக்க காவல்துறை. யாரையும் துன்புறுத்த மாட்டார்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நிகழுகின்றன. அதுவும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என  அறிவுறுத்தி வருகிறோம். காவல்துறையினர் சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்’


என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறினார். 


மேலும் படிக்க | ஈ.சி.ஆரில் நடந்த மதுவிருந்து... ஆட்டம் பாட்டம் ; போலீஸ் வந்ததும் அப்படியே ஓட்டம்..!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR