சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு மீண்டும் உடல் நிலை பாதிப்பால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக தலைவர் கருணாநிதி சளித் தொல்லை மற்றும் ஒவ்வாமை காரணமாக நேற்று இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கடந்த 1-ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை மயிலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக அவருக்கு அளிக்கப்பட்டு வந்த மருந்துகளால் ஏற்பட்ட ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. ஒரு வார சிகிச்சைக்கு பிறகு அவர் கடந்த 8-ம் தேதி வீடு திரும்பினார். அப்போது, 


இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு மீண்டும் மயிலாப்பூரில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.