கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் மாபெரும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல், லட்சக்கணக்கான பொதுமக்களும் கலந்துக்கொண்டனர். இந்த பொதுகூட்டத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 30 ஆயிரத்துக்கு அதிகமானோர் திமுக-வில் இணைந்தனர். பின்னர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்பொழுது அவர் கூறியதாவது:-


நான் மக்களில் ஒருவனாக தான் இருப்பேன். அதனால்தான் நான் மக்களை சந்திக்க வந்துள்ளேன். திமுக தொண்டர்களுக்கு ஜனநாயகமான களத்தில் அதிகமான வேலை இருக்கிறது. உழையுங்கள். உழைப்புக்கான பலனை நீங்கள் அடைவீர்கள். 


இன்று பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கத்தான் போகிறார். அதற்கு முன்னுதாரணம் தான் வடக்கு நான்கு மாநிலங்களில் பாஜக கட்சி தோல்வி அடைந்துள்ளது. அதேபோல தான் தமிழகத்தில் தற்போது இருக்கும் ஆட்சியும் தோல்வி அடைவது உறுதி. 


மத்திய, மாநில அரசுகளுக்கு நம் மக்கள் மீது உள்ள அலட்சியத்திற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், 'கஜா புயல் பாதிப்பில் நடைபெறும் நிவாரணப் பணிகள். தமிழகத்தை காப்பாற்ற இவர்களை விரட்டும் ஜனநாயக போரில் இனி நமது முழக்கம், 


‘’நாடும் நமதே!... நாற்பதும் நமதே!’’