தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தகவல்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காய்ச்சல் இருந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து திமுக தொண்டர்களும், பொதுமக்களும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
இது தொடர்பாக நேற்று பேட்டியளித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,  “மருத்துவமனைக்கு சென்று வந்த பின் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைவர் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.


இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்து வந்து கொண்டிருக்கின்றனர். இதை தொடர்ந்து, தற்போது பிரதமர் மோடியும் தொலைபேசி வாயிலாக கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்துள்ளார். 


இந்த நிலையில், மருத்துவ குழுவின் தீவிர சிகிச்சையால், தற்போது கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.