சென்னையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இரண்டு அரசு மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா பெருந்தொற்றின் (Coronavirus) இரண்டாவது அலையின் போது சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தனிமைப்படுத்ததுலுக்காக தனியார் விடுதியில் தங்க  வைக்கப்பட்டிருந்த போது சக பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு மருத்துவரும், சக பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு மருத்துவரும், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 


நான்கு பேருமே ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தை தொட்டபோது, தமிழகத்திலும் கொரோனா தொற்று மிக அதிகம் பரவியது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. 


அந்த கால கட்டத்தில் மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் அதிகநேரம் பணி செய்ய வேண்டிய நிலை இருந்ததால், அவர்களால் குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கில் அவர்கள் வீட்டுக்கே போகாமல் ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிந்து வந்தார்கள். அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் அரசே (TN Government) தனியார் விடுதிகளை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது.


ALSO READ:மேலாடையை நீக்காமல் தொடுவதும் பாலியல் வன்முறை தான்: உச்ச உச்ச நீதிமன்றம் 


அதன்படி தி.நகரில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அரசு பொதுமருத்துவமனை மருத்துவர் வெற்றிச் செல்வன்(35) என்பவர் அதே விடுதியில் தனிப்படுத்துதலில் இருந்த தன்னுடன் பணியாற்றும் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 


இதுகுறித்து பெண் மருத்துவர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டீனிடம் புகார் அளித்தார். புகாரை விசாரித்த டீன் அளித்த புகாரின் பேரில் தி.நகர் துணை ஆணையர் விசாரணை நடத்தியதில் குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து போலீஸார் மருத்துவர் வெற்றிச்செல்வனை பாலியல் வன்புணர்வு (Sexual Assault) வழக்கில் கைது செய்துள்ளனர். 


மேலும் மற்றொரு மருத்துவரான மோகன்ராஜ் (28) அதே விடுதியில் தனிமைப்படுத்திக்கொள்ள தங்கியிருந்த அரசு பெண் மருத்துவருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் அவரையும் விசாரித்த தி.நகர் துணை ஆணையர், விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து மருத்துவர் மோகன்ராஜையும் போலீஸார் கைது செய்தனர். 


பின்னர் இருவரும் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். அரசு மருத்துவர்களே சக பெண் மருத்துவர்களிடம் இவ்வாறு நடந்துக்கொண்டு அடுத்தடுத்து கைதானது மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ:Online Child Sexual Abuse: 3 ஆண்டுகளில் இத்தனை வழக்குகளா? பகீர் ரிப்போர்ட்!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR