பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை

கான்பூர் ரயில் நிலையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபரின்  சடலம் கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2021, 01:31 PM IST
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை title=

ஹைதராபாத்: ஹைதராபாதில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், கோவத்தையும் ஏற்படுத்தியது. குற்றம் சாட்டப்பட்ட ராஜு என்ற நபரை போலீசார் வலை வீசி தேடிக்கொண்டிருந்த நிலையில், அந்த நபர் ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வந்துள்ளன. 

வராங்கல் மாவட்டம் கான்பூர் ரயில் நிலையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபரின்  சடலம் கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

அந்த நபரின் முகம், அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்டவரின் கைகள் மற்றும் அவரது மற்ற உடல் பாகங்களில் இருந்த டாட்டூ அடையாளங்கள் மூலம், ஹைதராபாதின் சாய்தாபாதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் (Sexual Assault) செய்து கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாலகொண்டா ராஜூவாக அவர் இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர்.

ALSO READ: நாமக்கல்லில் நடுங்க வைக்கும் சம்பவம்: சிறுமி பாலியல் வன்கொடுமை, 12 பேர் கைது

ஸ்டேஷன் கிளாமர் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் நாயக், அந்த நபரின் உடல் கான்பூர் ரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் கிடைத்ததாக கூறினார்.

"டாட்டூ குறிகள், சிகை அமைப்பு மற்றும் பிற உடல் அம்சங்கள் ராஜூவைப் போலவே இருக்கின்றன." என்று அவர் கூறினார்.

ஐடி அமைச்சர் கேடி ராமாராவ் ட்விட்டரில் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.

"சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த நபர் கான்பூர் ஸ்டேஷனில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று தெலங்கானா டிஜிபி கருவினால் அறிவிக்கப்பட்டது" என்று ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹைதராபாதில் தனது அண்டை வீட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ராஜுவை போலீசார் வலை வீசித் தேடினர். ராஜுவின் புகைபப்டத்தை வெளியிட்ட போலீசார், அவரைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசை அறிவித்தனர்.

செப்டம்பர் 9 அன்று ஹைதராபாத்தில் உள்ள சிங்காரேனி காலனியில், சிறுமியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் (Police Station) புகார் அளிக்கப்பட்டது. அடுத்த நாள் அவரது உடல் பக்கத்து வீட்டில், பெட்ஷீட்டில் மூடப்பட்டிருந்த நிலையில் கண்டறியப்பட்டடது.

ALSO READ: Shocking! 3 வாரங்களில் 5 பெண்களை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் கைது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News