கடந்த 2017ம் ஆண்டு இதே நாள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று 2 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் சாதனைகள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் சிடி வெளியிடப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட சாதனை புத்தகங்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, அவருக்கு தமிழக மாநில பாஜக தலைவர்  டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சவாலான சூழலில் பதவியேற்றபோது தொடர்வாரா என்று பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் தொடர்ந்து பல சவால்களையும், சதிகளையும் கடந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தந்து பல சோதனைகளை சாதனையாக்கி திறமையான மக்கள் மனம் கவர்ந்த முதல்வராக 3_வது ஆண்டில் தொடரும் முதல்வருக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.