பாரதிராஜா மகனும் நடிகருமான மனோஜ் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் மனோஜை பிடித்து காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அவரது சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. 


இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ். இவர் சில படங்களில் நடித்து வருகிறார். ஸ்டெர்லிங் ரோட்டில் மனோஜ் விலை உயர்ந்த பி.எம்.டபுள்யூ காரை ஓட்டி சென்றுள்ளார்.


இந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் பாரதிராஜா மகனும் நடிகருமான மனோஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் அவரது சொகுசு கார் பறிமுதல் செய்தனர்.