Edappadi Palanisamy About Maamannan Movie: சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று (ஜூலை 2) நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து, செய்தியாளருக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிச்சாமி, "அதிமுகவில் இதுவரை ஒரு கோடியே  30 லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்னும் சில நாட்களில் அதனை 2 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 கோடி உறுப்பினர் சேர்ப்பது இலக்காக கொண்டு செயல்படுவதாகவும் தெரிவித்தார். மிகப்பெரிய தொண்டர்கள் நிறைந்த கட்சியாக அதிமுக உருவெடுக்கும், அப்போது ஓபிஎஸ் காணாமல் போவார்.


கர்நாடக அரசு தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு நடந்து கொள்ள வேண்டும். 50 ஆண்டுகளாக போராடி பெற்ற உரிமையை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும்.


முதல்வர் மீது குற்றச்சாட்டு


நல்லதாக இருந்தாலும் ஆட்சியில் இருக்கும்போது பார்த்து பார்த்து பேச வேண்டிய நிலை உள்ளது, கெட்டதாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது தைரியமாக செய்ய முடிந்தது என தமிழக முதலமைச்சர் கூறியது அவரது அனுபவம் இல்லாததை காட்டுகிறது. பொம்மை முதலமைச்சராக அவர் செயல்படுகிறார். இதில் இருந்து அவர் அதிமுக ஆட்சியிக்கு எதிராக என்னென்ன செய்திருப்பார் என்று மக்கள் தெரிந்து கொள்ள அவர் பேச்சு ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. 


மேலும் படிக்க | மேகதாது விவகாரத்தில் எடப்பாடி தெரிந்த விஷயத்தை சொல்ல மறுக்கிறார் - முத்தரசன்


படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது அதிமுகவின் நோக்கம் அதனடிப்படையில் படிப்படியாக அமல்படுத்த வேண்டும். படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துவதும் மதுவிலக்கால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அரசின் கடமை" என்றார்.


குழந்தை கை நீக்கம்...


ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறுமியின் கை தவறுதலாக எடுக்கப்பட்ட சம்பவம் குறித்து கேட்டபோது, "இது வன்மையாக கண்டிக்கத்தக்க மருத்துவத்துறையில் பணியற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு அரசு அவர்களுக்கு உதவி கரம் நீட்ட வேண்டும்"என பதிலளித்தார். மாமன்னன் திரைப்படம் குறித்து கேட்ட போது,"மாமன்னன் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. பார்க்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. எங்களுடைய இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால் நாங்கள் அதை பார்த்திருப்போம்" என்றார்.


செந்தில் பாலாஜி விஷயத்தில் அவரைக் காப்பாற்ற ஸ்டாலின் ஒட்டுமொத்த குடும்பமும் போராடுகிறது அமலாக்க துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதி நம்பர் கொடுக்கப்பட்ட ஒருவரை பதவியிலிருந்து நீக்கம் செய்யாது ஏன் என்றும் எனவே அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்


"முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது. அவர்களும் நிதிமன்றத்த்தில் வழக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு கைதி நம்பர் கொடுக்கப்பட்ட ஒருவரை பதவி நீக்கம் செய்யாதது கடந்த கால அரசியல் வரலாற்றில் இது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | செந்தில் பாலாஜியன் சகோதரருக்கு 3ஆவது முறையாக சம்மன் அனுப்பிய வருமான வரித்துறை…!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ