பிரபல பாடகர் மனோ, டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சட்டேனபல்லியில் 1965ம் ஆண்டில் பிறந்தவர் மனோ. இவரது தந்தை ரசூல், விஜயவாடா வானொலி நிலையத்தில் பணியாற்றியவர். தாயார் ஷகீதா மேடை நடிகையாக இருந்தார். 1984ம் ஆண்டு முதல் தெலுங்கு இசையமைப்பாளர் சக்கரவர்த்தியிடம் பணிபுரியத் ஆரம்பித்தார். 1986ம் ஆண்டு தமிழில் பூவிழி வாசலிலே படத்தில் இடம்பெற்ற  "அண்ணே அண்ணே" பாடலைப் பாடும் வாய்ப்பை இவருக்கு வழங்கினார் இசைஞானி இளையராஜா. 


இந்த நிலையில், சென்னையில் பிரபல பாடகர் மனோ டிடிவி தினகரன் முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திரைப்பட நடிகர் ரஞ்சித் அமமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.