ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முசாபர் கனி தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன். அவரது வயது 67. இவரின் இரண்டு மனைவிகளும் உயிரிழந்து விட்டனர். அவருக்கு வெங்கடேஷ் ( வயது 30), நிவாஸ் ( வயது 27), என்ற இரு மகன்கள் உள்ளனர். வெங்கடேஷ் மனநிலை பாதிக்கப்பட்டு கேரளாவில் சிகிச்சை பெற்று வருகிறார். லோகநாதன் இளைய மகன் நிவாஸ் உடன் பரமக்குடியில் வசித்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனநிலை பாதிக்கப்பட்ட வெங்கடேஷிற்க்கு பல இடங்களில் மருத்துவ சிகிச்சை அளித்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் தந்தையும், இளைய மகனும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். காலை முதல் லோகநாதனின் வீடு பூட்டி இருந்த நிலையில் அருகிலிருந்தவர்கள், சந்தேகம் கொண்டு வீட்டின் கதவை உடைத்து பார்க்கும் போது கயிறு மூலம் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்தது.


ALSO READ | குடும்பம் நடத்த வராத மனைவியை கொலை செய்த கணவர் கைது!!


இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பரமக்குடி டவுன் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


ALSO READ | பெண் காவலரின் தொடர் கொலை மிரட்டல்: தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த நபர்


 மனநிலை சரியில்லாத மூத்த மகனால் ஏற்பட்ட மன உலைச்சல் காரணமாக தந்தை, மகன் விஷமருந்தி, தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் விசாரித்து வருகின்றனர். தந்தை, மகன் உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தற்கொலை குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


ALSO READ | திருமணம் செய்து ஏமாற்றினாரா விஏஓ? தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR