கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே உள்ள இனயம் சின்னத்துறை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் பெஸ்லின் (24) இவரும், இவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர்கள் துறைமுகத்தையொட்டி உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 


இதில் எதிர்பாராத விதமாக படகில் மீன்பிடித்து கொண்டிருந்த அருள் பெஸ்லின் மீது மின்னல் தாக்கியது. அவர் உடல் கருகிய நிலையில் சுருண்டு விழுந்தார். இதை பார்த்த சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 


உடனே, அவர்கள் அருள்பெஸ்லினை மீட்டு அவசரம், அவசரமாக கரை திரும்பினர். பின்னர், அவரை ஆம்புலன்சு மூலம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அருள் பெஸ்லின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 


ALSO READ | பார்கிங் பிரச்சனையால் பறிபோன உயிர்கள்: குழந்தைகளின் கண்முன் கொடூர கொலை


இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மீன்பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | பகீர் சம்பவம்: உணவில் விஷம் வைத்த மனைவி, தப்பிப்பிழைத்த கணவன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR