மதுரை மற்றும் மதுரை சுற்றி பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பூக்களின் விளைச்சல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாட்டுத் தாவணி அருகே அமைந்துள்ள மலர் சந்தையில் விற்பனைக்கு வருகின்ற அனைத்து பூக்களும் கடுமையான விலை ஏற்றம் கொண்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மதுரை மல்லிகை விலை கிலோ ரூ.4 ஆயிரத்தை எட்டியுள்ளது. நேற்று வரை அதிகபட்சமாக ரூ.2,500க்கு விற்பனையான மதுரை மல்லிகை விலை இன்று திடீரென 4 ஆயிரத்தை எட்டியுள்ளது.


இதேபோன்று 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட  முல்லை பூ இன்று கிலோ 1500 ரூபாய்க்கும், 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சி பூ 1200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


ALSO READ | மழையைத் தொடர்ந்து ஷாக் கொடுக்கும் காய்கறி விலை: தவிக்கும் சென்னைவாசிகள்


சம்பங்கி கிலோ 850 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் பிற அனைத்து பூக்களின் விலைகளும் கடுமையாக விலை உயர்ந்துள்ளன.


இந் நி்லையில் மழை காரணமாக கனகாம்பரம் பூவின் விளைச்சல் இல்லாததால் கனகாம்பரம் பூவின் வரத்து முற்றிலும் இல்லாத நிலை தொடர்கிறது.


முன்னதாக சென்னை மாநகரில் ஆங்காங்கே மழை பெய்து வந்ததால், காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. குறிப்பாக தக்காளியின் விலை பெருமளவு அதிகரித்தது. 


ALSO READ | தமிழகத்தில் தொடரும் கொள்ளை சம்பவம்: அச்சத்தில் மக்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR