தமிழகத்தில் தொடரும் கொள்ளை சம்பவம்: அச்சத்தில் மக்கள்!

கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 9, 2021, 06:16 PM IST
தமிழகத்தில் தொடரும் கொள்ளை சம்பவம்: அச்சத்தில் மக்கள்! title=

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள குப்பத்து மேடு கிராமத்தில் வசிப்பவர் செல்வநாதன்.  கடந்த இரண்டு மாதங்களாக இவர் தனியாகவே வசித்து வருகிறார்.  இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அவரது வீட்டுக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரது கை மற்றும் கால்களை கட்டி போட்டு, வீட்டில் இருந்த 90 ஆயிரம் பணம் மற்றும் 13 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.  மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் தெரியக்கூடாது என்பதற்காக அங்கிருந்த வயர்களையும் துண்டித்து விட்டு சென்றுள்ளனர். 

ALSO READ | ஆன்லைன் காதலா? அப்பா பார்த்த மாப்பிள்ளையா? சென்னை பெண்ணின் முடிவால் பரபரப்பு !!

செல்வநாதனின் மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் இருப்பதால் இவர் தனியாக வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  கொள்ளையர்கள் செல்லும்போது செல்வநாதன் வீட்டில் இருந்த பணம் மற்றும் அனைத்து நகைகளையும் எடுத்துச் செல்கிறீர்களே எனக் கூறியதை அடுத்து கொள்ளையர்கள் ஒரு  மோதிரம் மற்றும் 1000 ரூபாய் பணத்தை செலவிற்காக கொடுத்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

இதேபோல மற்றொரு கொள்ளை சம்பவம் ஒன்றை பட்டப்பகலில் அரங்கேறியுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்.  இவர் கார்பெண்டராக பணியாற்றி வரும் நிலையில் இவரது மனைவி செந்தாமரை ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.  இவரது வீடு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 9:30மணிக்கு  வழக்கம்போல் வீட்டிலிருந்த அனைவரும் வீட்டை பூட்டிக்கொண்டு பணிக்குச் சென்ற நிலையில் அருகாமையில் உள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் விஜயகுமாரின் மகன் மதன்குமார் மதிய உணவு இடைவேளைக்காக வீட்டில் உணவு சாப்பிட வந்த போது வீட்டின் வெளிப்புற கேட் மற்றும்  கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு  உடனடியாக தந்தை விஜயகுமாருக்கு தகவல் அளித்தான்.

தகவலின் பேரில் வீட்டிற்கு வந்த விஜயகுமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள பீரோ கதவுகள் உடைக்கப்பட்டு அதில்  இருந்த 15.5 சவரன் தங்க நகைகள் மற்றும் 16 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம்  ஆகியவை கொள்ளை அடிக்கபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த காவல்துறையினர் கொள்ளை நடைபெற்ற இடத்தில் பல்வேறு தடையங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO | இனி தமிழில்தான் இனிஷியல்: பள்ளி கல்லூரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News