சென்னையில் பெற்ற மகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய உதவிய வழக்கில் 13 ஆண்டுகளுக்கு பிறகு  தாய் மற்றும் அவரது உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த சாந்தி தனது கணவர் இறந்ததால் தனது தம்பி தேசப்பனிடம் தனது 1 வயது பெண் குழந்தையை வளர்ப்பதற்காக கொடுத்துள்ளார். பெதாய் மாமாவான தேசப்பன் அச்சிறுமிக்கு ஒன்பது வயது இருக்கும் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அச்சிறுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டிலிருந்து வெளியேறி பிராட்வேயில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு வளர்ந்து வந்துள்ளார். அதன்பிறகு சிறுமிக்கு 13 வயதானவுடன் மீண்டும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தாய்மாமன் தேசப்பன் மற்றும் அவருடைய மனைவி ரேவதி இருவரும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அப்பொழுது அச்சிறுமியை தேசப்பன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதில் சிறுமி கர்ப்பமானதை அடுத்து அவருக்கு கருக்கலைப்பும் செய்துள்ளனர். 



அதன்பிறகு தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகின்றது. இதற்கு சிறுமியின் தாய் மற்றும் தேசப்பனின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளனர். சிறுமியின் தாய் மகளை வீடியோவும் எடுத்துள்ளார். தன்னை ஏன் இப்படி துன்புறுத்துகிறீர்கள் என சிறுமி கேட்டபோது அவர் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி தாய் மற்றும் அத்தை இருவரும் துன்புறுத்தியுள்ளனர். 


மேலும் படிக்க | கோவையில் சீனியரை நிர்வாணமாக்கி அடித்த ஜூனியர் மாணவர்கள்!


அதன்பிறகு அங்கிருந்து தப்பித்த சிறுமி 2020 ஆம் ஆண்டு பெரவள்ளூரில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்ந்துள்ளார். அங்கு தனியார் காப்பகத்தின் பொருப்பாளர் நிர்வாகி அச்சிறுமிக்கு கடந்த 2021யில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பெரவள்ளுர் காவல் நிலையம் மூலமாக சிறுமி தந்த வாக்குமூலம் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு   நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சிறுமி தனது சிறுவயதில் தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளை நீதிபதிகளிடம் கூறி அழுதுள்ளார். அந்த வழக்கையும் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து மீண்டும் ராயபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சிறுமியின் வழக்கு மாற்றப்பட்டு விசாரணை வந்தது.  



மேலும் படிக்க | இன்று வளைகாப்பு: நிறை மாத கர்ப்பிணி மரணம்! சந்தேகம் எழுப்பும் தந்தை! என்ன நடந்தது?


சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்த வழக்கில் தொடர்புடைய சிறுமியின் தாய் சாந்தி மற்றும் தாய்மாமன் மனைவி ரேவதி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாகியுள்ள தாய்மாமன் தேசப்பன், அவரது  நண்பர்கள் ரமேஷ், சீனிவாசன் மற்றும் சிவா ஆகிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். தாயே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்ய உதவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR